Sunday 28th of April 2024 07:00:48 AM GMT

LANGUAGE - TAMIL
1,118 ஆக அதிகரித்துள்ளது
இந்தோனேசியாவில் இருந்து இலங்கை திரும்பிய ஒருவருக்கு கொரோனா தொற்று!

இந்தோனேசியாவில் இருந்து இலங்கை திரும்பிய ஒருவருக்கு கொரோனா தொற்று!


இந்தோனேசியாவில் இருந்து இலங்கை திரும்பியிருந்த ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து மொத்த தொற்றாளர்களது எண்ணிக்கை 1,118 ஆக அதிகரித்துள்ளது.

இந்தோனேசியாவில் இருந்து இலங்கை வந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு சற்று முன்னர் தெரிவித்துள்ளது.

அவர் பெல்வெஹர தனிமைப்படுத்தல் முகாமில் தனிமைப்படுத்தி கண்காணிக்கப்பட்டு வந்த நிலையில் அவருக்குக் கொரோனா உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

அதன்படி நாட்டில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 1,118 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை 674 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும் 435 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 9 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.


Category: உள்ளூர, புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE